சட்ட விரோதமாக திருப்பூரில் தங்கி கடந்த 2 ஆண்டுகளாக டெய்லர் வேலை பார்த்து வந்த நபர்..! மடக்கி பிடித்து கைது செய்த போலீஸ்…!

 2 ஆண்டுகளாக தையல் தொழிலாளியாக வேலை பார்த்த வங்கதேச நாட்டை சேர்ந்தவரை, திருப்பூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பராகனாஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது சொஹல் ராணா (28).



இவர், திருப்பூர் பாண்டியன் நகர் பின்புறம் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்தார். அதே பகுதியில், தனியார் பின்னலாடை நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், அவர் வங்கதேச நாட்டை சேர்ந்தவர் என சந்தேகம் எழ, திருமுருகன்பூண்டி காவல்துறையினர் விசாரித்தனர்.

அதில், முகமது சொஹல் ராணா, வங்கதேச நாட்டை சேர்ந்த நவஹாலே மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

அவர் மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பராகனாஸ் மாவட்ட முகவரி போலியானது என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை நேற்று (ஜூலை 16) திருமுருகன்பூண்டி காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அவருடன் தொடர்பில் இருந்த பிற நபர்கள் யாரேனும் தங்கியிருந்தார்களா என்பது தொடர்பாக திருமுருகன்பூண்டி காவல்துறையினர் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


Post a Comment

Previous Post Next Post