சொந்த பிள்ளைகளை கைவிட்டு சகோதரி கணவனுடன் ஓடிய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..!

கேரளாவில் சொந்த பிள்ளைகளை கைவிட்டு சகோதரியின் கணவருடன் சென்ற பெண்ணை போலீசார் கைது செதுள்ளனர்.

கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ஐஸ்வர்யா(28) மற்றும் இவரது சகோதரியின் கணவன் 36 வயதான சஞ்சித் ஆகியோரை தமிழகத்தின் மதுரையில் வைத்து ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

சஞ்சித் என்பவருக்கு இரண்டு பிள்ளைகளும் ஐஸ்வரியாவுக்கு ஒரு பிள்ளையும் உள்ளனர்.

இருவருக்கும் இடையே கள்ள உறவு இருந்துள்ளது. அடிக்கடி இவர்கள் தனிமையில் சந்தித்து தங்கள் உறவை வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில்,இவர்கள் இருவரும் தங்கள் பிள்ளைகளை விட்டு விட்டு ஊரை விட்டு சென்ற வழக்கில் தற்போது சிக்கியுள்ளனர்.

ஐஸ்வரியா மாயமானதை அடுத்து கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

இதேபோன்று சஞ்சித்தும் மாயமானதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், இதை ஒரே வழக்காக விசாரித்த போலீசார், இவர்கள் இருவரும் வேறு வேறு பெயர்களில் தமிழகத்தின் மதுரைக்கு பயணமானது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, ரயில்வே போலீசாரின் உதவியுடன், அவர்களை கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Post a Comment

Previous Post Next Post